மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த 9 பேர் கைது

 

மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த 9 பேர் கைது

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மதுவிற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார்கள் வந்தன. அதன் பேரில் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. தங்கதுரை உத்தரவிட்டார். இதனால், நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.

மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த 9 பேர் கைது

அப்போது, சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கிவைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்த 9 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், அரசு அனுமதியின்றி ஓட்டல் கடைகளிலும், தள்ளுவண்டி கடைகளிலும் மதுஅருந்த அனுமதி அளித்ததாக கடை உரிமையாளர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.