9 வயது சிறுவன் நரபலி: வேண்டுதல் நிறைவேற செய்ததாக பரபரப்பு வாக்குமூலம்!

 

9 வயது சிறுவன் நரபலி: வேண்டுதல் நிறைவேற செய்ததாக பரபரப்பு வாக்குமூலம்!

வேண்டுதல் நிறைவேறக் கடவுளுக்கு 9 வயது சிறுவனை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா: வேண்டுதல் நிறைவேறக் கடவுளுக்கு 9 வயது சிறுவனை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தில் உள்ள சுந்திமுந்தா கிராமத்தைச் சேர்ந்த ஞானஷ்யாம் ராணா என்ற 9 வயது சிறுவன் கடந்த 13-ம் தேதி மாயமானான். அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால், சிறுவனின் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர். 

இது குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார்  18-ம் தேதி அங்குள்ள ஆற்றின் கரையில் தலையில்லாமல் புதைக்கப்பட்ட சிறுவனின் சடலத்தை  கைப்பற்றினர். சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியிலேயே சிறுவனின் வெட்டப்பட்ட தலையும் கைப்பற்றப்பட்டது. 

இதனையடுத்து குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவனின் மாமா மற்றும் அண்னன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் , கடவுளிடம் வேண்டியது நிறைவேறச் சிறுவனை நரபலி கொடுப்பதற்காக கொன்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சிறுவனை கொல்ல பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ள போலீசார்,  அவர்களைக் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.