‘9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரண தண்டனை’ : மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 

‘9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரண தண்டனை’ : மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

‘9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரண தண்டனை’ : மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தெலங்கானா: 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் வாராங்கல் பகுதியைச் சேர்ந்த கோலிபகா பிரவீன் என்பவர் கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் பிரவீனை பிடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து பிரவீன் மீது  வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த வழக்கானது வாராங்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை தொடங்கிய 21 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பிரவீன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து வழக்கின் சாட்சியங்களாக 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

judge

இந்நிலையில் 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றத்திற்காக  பிரவீனுக்கு மரண தண்டனை அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.48 நாட்களில் இந்த வழக்கானது விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.