8ம் வகுப்பு மாணவிக்கு லவ் லெட்டர் கொடுத்த ஆசிரியர்; மொட்டையடித்து, கரிபூசி ஊர்வலம்

 

8ம் வகுப்பு மாணவிக்கு லவ் லெட்டர் கொடுத்த ஆசிரியர்; மொட்டையடித்து, கரிபூசி ஊர்வலம்

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்து தனது காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வந்திருக்கிறார் ஆசிரியர். அதுமட்டுமல்லாமல் அம்மாணவியிடம் சில்மிஷம் செய்தும் வந்துள்ளார்.

8ம் வகுப்பு மாணவிக்கு லவ் லெட்டர் கொடுத்த ஆசிரியர்; மொட்டையடித்து, கரிபூசி ஊர்வலம்

தனது காதலை ஏற்காவிட்டால் குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார் ஆசிரியர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் மண்பூர் கிராமத்தில் இது நிகழ்ந்துள்ளது. இதனால் வீட்டினரிடம் வீட்டினர் யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்திருக்கிறார் மாணவி.

8ம் வகுப்பு மாணவிக்கு லவ் லெட்டர் கொடுத்த ஆசிரியர்; மொட்டையடித்து, கரிபூசி ஊர்வலம்

ஆனால், ஆசிரியரின் தொல்லை அதிகமாகவே வேறு வழியின்றி அதைப் பற்றி வீட்டில் சொல்லி அழுதிருக்கிறார். இதையடுத்து மாணவியின் குடும்பத்தார் இது குறித்து அக்கம் பக்கத்தில் இருப்போரிடம் தகவல் தெரிவிக்க, அந்த கிராமமே திரண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியரை பிடித்து அவருக்கு பாதி மொட்டை அடித்து, கரிபூசி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இதுபற்றிய விவரம் போலீசாருக்கு தெரிய வந்ததால் அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியரை மீட்டனர். நடந்த சம்பவத்திற்காக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் போலீசார். அதே நேரத்தில் மாணவி சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆசிரியரையும் விசாரித்து வருகிறார்கள்.