8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… முதியவர் போக்சோவில் கைது…

 

8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… முதியவர் போக்சோவில் கைது…

தர்மபுரி

பென்னாகரம் அருகே 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 65 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் பென்னாகரம் அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று பெற்றோர் விவசாய வேலைக்கு சென்றதால், சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் துரைசாமி என்பவர் வீட்டிற்குள் புகுந்து சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… முதியவர் போக்சோவில் கைது…

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று, சிறுமியை மீட்டனர். தொடர்ந்து, முதியரை பிடித்து தர்மஅடி கொடுத்து பென்னாகரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முதியவர் துரைசாமியை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.