டிரைவிங் லைசென்ஸ் பெற இனி ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் 8 போட வேண்டிய அவசியம் இல்லை

 

டிரைவிங் லைசென்ஸ் பெற இனி ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் 8 போட வேண்டிய அவசியம் இல்லை

டிரைவிங் லைசென்ஸ் பெற இனி ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் 8 போட வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய நடைமுறை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.

டிரைவிங் லைசென்ஸ் பெற இனி ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் 8 போட வேண்டிய அவசியம் இல்லை

டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டும் என்றால் தனியார் ஓட்டுநர் பள்ளிகளில் பயிற்சி பெற்றிருந்தாலும், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் நடக்கும் சோதனையில் தேர்ச்சி பெற்றால்தான், 8 போட்டு காட்டினால்தான் லைசென்ஸ் வழங்கப்படும்.

டிரைவிங் லைசென்ஸ் பெற இனி ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் 8 போட வேண்டிய அவசியம் இல்லை

ஆனால், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய நடைமுறை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில், அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுநர் பயிற்சியை முடித்தவர்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பிக்கலாம். ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தனியாக சோதனையில் பங்கேற்க தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது.

டிரைவிங் லைசென்ஸ் பெற இனி ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் 8 போட வேண்டிய அவசியம் இல்லை

இந்த புதிய நடைமுறை வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்துநடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் 8 போடும் என்ற ஒன்றினால்தான் பலபேர் லைசென்ஸ் பெறாமலேயே எஸ்கேப் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த அறிவிப்பு மகிழ்ச்சிதான்.