சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிக்கு கொரோனா; வான்கடே ஊழியர்கள் 8 பேருக்கும் கொரொனா

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிக்கு கொரோனா; வான்கடே ஊழியர்கள் 8 பேருக்கும் கொரொனா

மும்பையில் தங்கியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், மும்பை வான்கடே மைதானத்தை சேர்ந்த ஊழியர்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிக்கு கொரோனா; வான்கடே ஊழியர்கள் 8 பேருக்கும் கொரொனா

ஐபிஎல்-2021 சீசன் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. 10ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மும்பையில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி ஒருவருக்கு கொரோனா என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், டெல்லி அணியை சேர்ந்த அக்சார் பட்டேலுக்கும் வான்கடே மைதான ஊழியர்கள் 8 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

ஆனாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்வார்கள் என்று தகவல்.