8ம் வகுப்பு மாணவியை எட்டு மாதங்களாக… முதியவர்கள் சிக்கினர்

 

8ம் வகுப்பு மாணவியை எட்டு மாதங்களாக… முதியவர்கள் சிக்கினர்

எட்டாம் வகுப்பு மாணவிக்கு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து எட்டு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த முதியவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வட மதுரையில் உள்ள ஆர். கல்லுபட்டியை சேர்ந்தவர் தங்கவேல்(37). கூலித் தொழிலாளியான இவர் அதே பகுதியில் வசித்து வரும் எட்டாம் வகுப்பு மாணவி, வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்து கொண்டு அவருக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து நைசாக பேசி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் சில்மிஷம் செய்துள்ளார்.

8ம் வகுப்பு மாணவியை எட்டு மாதங்களாக… முதியவர்கள் சிக்கினர்

இதையடுத்து, இந்த சம்பவத்தை சொல்லி மிரட்டியே அவர் அந்த சிறுமியிடம் தொடர்ந்து பழகி வந்துள்ளார். தங்கவேலுவின் தங்கவேலுவுடன் அந்த மாணவி அடிக்கடி சென்று வருவதை பார்த்த அப்பகுதியில் இருந்த முதியவர்கள் பெருமாள்(வயது65), குருநாதன்(வயது70) இருவரும் தாங்களும் அந்த மாணவியை பயன்படுத்திக் கொண்டனர்.

தங்களுக்கு சம்மதிக்கவில்லை என்றால் தங்கவேலு உடன் உள்ள தொடர்பை வெளியே சொல்லி விடுவேன் என்று சொல்லி மிரட்டியே அந்த மாணவியுடன் உறவில் இருந்துள்ளனர். இப்படி ஒரு நாள் இரண்டு நாள் ஒரு வாரம் ஒரு மாதம் இல்லை… கடந்த 8 மாதங்களாக இப்படி அந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

அண்மையில் அந்த மாணவி தங்கவேலு உடன் செல்வதை பார்த்த அப்பகுதியில் உள்ள சிலர் சந்தேகப்பட்டு, மாணவியின் பெற்றோரிடம் சொல்லி இருக்கிறார்கள். உடனே பெற்றோர் மாணவியை பிடித்து விசாரித்தபோது, அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லி அழுதிருக்கிறார்.

8ம் வகுப்பு மாணவியை எட்டு மாதங்களாக… முதியவர்கள் சிக்கினர்

இதை தங்களிடம் சொல்ல வேண்டியதுதானே என்று கேட்டதற்கு, வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று தங்கவேலுவும், முதியவர்களும் மிரட்டியதாக சொல்லி அழுதிருக்கிறார்.

இதன்பின்னர், வட மதுரையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வடமதுரை அனைத்து மகளிர் காவல் துறை ஆய்வாளர் தென்றல், தங்கவேலு, பெருமாள், குருநாதன் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்த போது தான் அவர்கள் தின்பண்டம் வாங்கி கொடுத்தும் மிரட்டியும் எட்டு மாதங்களாக அந்த மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததை ஒப்புக் கொண்டனர்.

எட்டாம் வகுப்பு மாணவியிடம் முதியவர்கள் மூன்று பேர் இப்படி அக்கிரம செயலில் ஈடுபட்டிருக்கும் செய்தி அறிந்து அப்பகுதியினர் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றிருக்கிறார்கள்.