செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி!

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. செங்கல்பட்டை அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதனால் கடந்த 19 ஆம் தேதி முதல் கொரோனா அதிகமாக பரவியிருக்கும் மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம், தேனி ரம் மதுரை 4 மாவட்டங்களிலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 4,000ஐ எட்டியிருந்த நிலையில் நேற்று மேலும் 162 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,073 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,137 ஆக உயர்ந்துள்ளது.