மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 85 வயது மூதாட்டி பலி…

 

மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 85 வயது மூதாட்டி பலி…

சிவகங்கை

சிவகங்கை அருகே மழையில் குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 85 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் சின்ன பொன்னம்பட்டியை சேர்ந்தவர் அழகம்மாள் (85). சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் உயிரிழந்த நிலையில், மூதாட்டி குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையிடல் சிவகங்கை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததால், மூதாட்டி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அழகம்மாளின் மீது எதிர்பாராத விதமாக மண் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 85 வயது மூதாட்டி பலி…

இதில், இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த மூதாட்டியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை தாலுகா காவல் நிலைய போலீசார், மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் சுவர் இடிந்து மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியினரை சோகத்தில் மூழ்க செய்துள்ளது.