சென்னையில் 84 சதவிகித தெருக்களில் கொரோனா பாதிப்பு இல்லை! – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

 

சென்னையில் 84 சதவிகித தெருக்களில் கொரோனா பாதிப்பு இல்லை! – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னையில் 16 சதவிகித தெருக்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது என்றும் 84 சதவிகித தெருக்களில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 84 சதவிகித தெருக்களில் கொரோனா பாதிப்பு இல்லை! – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டிசென்னையில் குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முகக் கவசம் வழங்கும் பணிகள் தொடங்கின. அமைச்சர் ஜெயக்குமார் இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “சென்னையில் 84 சதவிகித தெருக்களில் கொரோனா பிரச்னை இல்லை. 16 சதவிகித தெருக்களில்தான் கொரோனா உள்ளது. முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை பொது மக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். அரசின் அறிவுறுத்தல்களை பொது மக்கள் முழுமையாக கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா பரவலைத் தடுக்க முடியும்” என்றார்.