“ஈரோட்டில் உள் விளையாட்டு அரங்கம் உள்பட 82 புதிய திட்டங்கள்”… ஆய்வு பணி நடைபெறுவதாக அமைச்சர் முத்துசாமி தகவல்!

 

“ஈரோட்டில் உள் விளையாட்டு அரங்கம் உள்பட 82 புதிய திட்டங்கள்”… ஆய்வு பணி நடைபெறுவதாக அமைச்சர் முத்துசாமி தகவல்!

ஈரோடு

ஈரோட்டில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் உள்பட 82 புதிய திட்டங்கள் செயல்படுத்த ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு மாருதி நகர் மற்றும் திண்டல் லட்சுமி நகரில் தார் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி, பின்னர் சோலார் பகுதியில் அமைய உள்ள ஈரோடு புதிய பேருந்து நிலையம் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு மாநகரில் ஏற்கனவே பேருந்து நிலையம் இருந்தாலும், தற்போதைய சூழலில் போக்குவரத்து அதிகமாக உள்ளதாகவும், இதனால் சோலாரில் மாநகராட்சிக்கு சொந்தமான 15 முதல் 20 ஏக்கர் நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முயற்சித்து வருவதாகவும் கூறினார்.

“ஈரோட்டில் உள் விளையாட்டு அரங்கம் உள்பட 82 புதிய திட்டங்கள்”… ஆய்வு பணி நடைபெறுவதாக அமைச்சர் முத்துசாமி தகவல்!

அவ்வாறு வந்தால் பழைய பேருந்து நிலையம் நகர பேருந்து நிலையமாக செயல்படும் என்றும், இது ஒரு மாதிரி பேருந்து நிலையமாகவும், மாதிரி மார்க்கெட்டாக அமைய வேண்டும் என்று முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், ஈரோடு மஞ்சள் வளாகத்தை இன்னும் பெரிய அளவில் 15 ஏக்கரில் ஏற்படுத்தி தரப்படும் என்று கூறிய அமைச்சர் முத்துச்சாமி, விளையாட்டு துறை முன்னேற்றத்திற்காக ரூ.35 கோடி மதிப்பில் ஒரு திட்டம் செயல்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் கூறினார். மேலும், புதிய சட்டக் கல்லூரி உள்பட சுமார் 82 திட்டங்களை வகுத்து உள்ளதாகவும் அவர் கூறினார்.

“ஈரோட்டில் உள் விளையாட்டு அரங்கம் உள்பட 82 புதிய திட்டங்கள்”… ஆய்வு பணி நடைபெறுவதாக அமைச்சர் முத்துசாமி தகவல்!

மேலும், மொடக்குறிச்சி தொகுதியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான இடம் குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறிய அமைச்சர் முத்துசாமி, முதல்வர் இந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறினார். மேலும், மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஆரம்பிக்கப்பட்ட வாட்ஸ்அப் செயலில் இதுவரை 117 புகார்கள் பெறப்பட்டதாகவும், இதில் 93 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். மீதமுள்ள 24 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் முத்துச்சாமி கூறினார்.