புதுச்சேரியில் மேலும் 81பேருக்கு கொரோனா தொற்று : மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,418 ஆக உயர்வு!

 

புதுச்சேரியில் மேலும் 81பேருக்கு கொரோனா தொற்று : மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,418 ஆக உயர்வு!

இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 8,20,916 லிருந்து 8,49,553 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5, 34 ,621 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22, 674 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

 

புதுச்சேரியில் மேலும் 81பேருக்கு கொரோனா தொற்று : மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,418 ஆக உயர்வு!

புதுச்சேரி மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அங்கு முதல்வர் நாராயணசாமியின் உத்தரவின் படி புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் அங்கு பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது.

புதுச்சேரியில் மேலும் 81பேருக்கு கொரோனா தொற்று : மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,418 ஆக உயர்வு!

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 81 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,418 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் 71 பேர், காரைக்காலில் 10 பேர் என மொத்தம் 81 பேர் ஒரேநாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இதுவரை 739 பேர் குணமடைந்த நிலையில் 661 பேர் சிகிச்சையில் உள்ளனர்.