திருப்பத்தூர்: 80 வயது மூதாட்டியை வன்கொடுமை செய்ய முயன்ற போதை ஆசாமி கைது

 

திருப்பத்தூர்: 80 வயது மூதாட்டியை வன்கொடுமை செய்ய முயன்ற போதை ஆசாமி கைது

திருப்பத்தூர் அருகே மதுபோதையில் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 62 வயது நபரை போலீசார், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் கரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள் (80). கணவர் உயிரிழந்த நிலையில், நாகம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில்,அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் (62) என்பவர், மதுபோதையில் வீட்டில் தனியாக இருந்த நாகம்மாளை கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனைகண்டு நாகம்மாள் அலறவே, அவரது உறவினர் ஓடி வந்து காப்பாற்றியுள்ளார். இந்நிலையில், அவர்களுக்கும் பார்த்திபன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் அடைந்த நாகம்மாள் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் பார்த்திபனை கைது செய்தனர்.