‘800’ பட சர்ச்சை : செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டு சென்ற நடிகர் விஜய் சேதுபதி

 

‘800’ பட சர்ச்சை : செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டு சென்ற நடிகர் விஜய் சேதுபதி

சென்னையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றார்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இயக்குநர் சீனுராமி, பாரதிராஜா, கவிஞர்கள் தாமரை, வைரமுத்து , சீமான், திருமுருகன் காந்தி என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் முத்தையா முரளிதரன் பயோபிக் படமான 800 இல் தொடர்ந்து நடிக்கிறேனா ? இல்லையா? என்பதை விஜய் சேதுபதி இன்னும் அறிவிக்கவில்லை.

‘800’ பட சர்ச்சை : செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டு சென்ற நடிகர் விஜய் சேதுபதி

இந்நிலையில் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்த இயற்கை பானம் தொடங்கவிழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது அவர் பாரம்பரிய உடை அணிந்து விவசாயிகளுடன் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் விழாவில் பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பேசவில்லை.

‘800’ பட சர்ச்சை : செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டு சென்ற நடிகர் விஜய் சேதுபதி

இதனால் செய்தியாளர்கள் விஜய் சேதுபதியிடம் ‘800’ பட விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப அங்கு ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் அவர்களையும் சந்திக்க மறுத்த அவர் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார்.

‘800’ பட சர்ச்சை : செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டு சென்ற நடிகர் விஜய் சேதுபதி

முன்னதாக அமைச்சர் கடம்பூர் ராஜு, “‘800’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது தனிப்பட்ட உரிமை என்றாலும் உணர்வை புரிந்து செயல்பட்டால் விஜய்சேதுபதி எதிர்காலத்திற்கு நல்லது. அதனால் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பற்றி, அவர் யோசித்து பார்க்க வேண்டும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது .