சென்னையில் இன்று ஒரே நாளில் 60 வயதுக்கு மேற்பட்ட 80 பேருக்கு கொரோனா உறுதி!

 

சென்னையில் இன்று ஒரே நாளில் 60 வயதுக்கு மேற்பட்ட 80 பேருக்கு கொரோனா உறுதி!

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மற்றும் குஜாராத்தை தொடர்ந்து அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழகம் தான். தமிழிகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 17,000ஐ எட்டியுள்ளது. இதில் பெருமளவு பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,000ஐ கடந்துள்ளது. அதனால் நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டத்தின் படி, சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பெரும்பாலும் கர்ப்பிணிகளையும், முதியவர்களையும், சிரியவர்களையும் அதிகமாகத் தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 60 வயதுக்கு மேற்பட்ட 80 பேருக்கு கொரோனா உறுதி!

இந்நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 60 வயதுக்கு மேற்பட்ட 80 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், 60 வயதில் இருந்து 69 வயது வரை இருக்கும் 47 பேருக்கும், , 70 வயதில் இருந்து 79 வயது வரை இருக்கும் 27 பேருக்கும் 80 வயதை கடந்த 6 பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.