8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… முதியவர் மீது போக்சோ வழக்குப்பதிவு

 

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… முதியவர் மீது போக்சோ வழக்குப்பதிவு

தூத்துக்குடி

திருச்செந்தூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெயிண்டர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் (52). இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், ஷாஜகான் தனது பக்கத்து வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… முதியவர் மீது போக்சோ வழக்குப்பதிவு

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் இந்திரா, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், ஷாஜகான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதனை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான ஷாஜகானை தீவிரமாக தேடி வருகின்றனர்.