கோயில் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி!

 

கோயில் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி!

திருவாரூர்

மன்னார்குடியில் கோயில் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காந்தி சிலை பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் ஆதவன்(8). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், ஆதவன் இன்று காலை வீட்டின் அருகே சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்துப் பார்த்தபோது, சிறுவன் மாயமானதாக கூறப்படுகிறது.

கோயில் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி!

பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும், சிறுவன் கிடைக்காததால் இதுகுறித்து, உறவினர்கள் மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில், ராஜன் வீட்டின் அருகேயுள்ள திருப்பாற்கடல் குளத்தில் ஆதவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மிதந்தான். இதனை கண்டு, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

தகவல் அறிந்த போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.