ரூ.15 கோடி செல்போன் கொள்ளை – 8 கொள்ளையர்கள் தமிழகம் அழைத்து வருகை

 

ரூ.15 கோடி செல்போன் கொள்ளை – 8 கொள்ளையர்கள் தமிழகம் அழைத்து வருகை

கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே கண்டெய்னர் லாரியை கடத்தி, 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கைதான 8 வடமாநில கொள்ளையர்களை போலீசார், தமிழகம் அழைத்து வந்தனர்.

ரூ.15 கோடி செல்போன் கொள்ளை – 8 கொள்ளையர்கள் தமிழகம் அழைத்து வருகை

கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து மகராஷ்டிரா மாநிலத்திற்கு கண்டெய்னர் லாரியில் ஏற்றிச்சென்ற 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை, சூளகிரி அடுத்த மேலுமலை அருகே வடமாநில கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து, மத்திய பிரதேச மாநிலத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையில் செல்போன் கொள்ளையில் தொடர்புடைய 10 பேரை கைதுசெய்தனர்.

ரூ.15 கோடி செல்போன் கொள்ளை – 8 கொள்ளையர்கள் தமிழகம் அழைத்து வருகை

மேலும் அவர்களிடம் இருந்து, 4 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே கொள்ளையர்களில் 2 பேர், நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற நிலையில், எஞ்சிய 8 பேரை, தனிப்படை போலீசார் கிருஷ்ணகிரி அழைத்துவரப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.