சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 8 பேர் பலி!

 

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 8 பேர் பலி!

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 18,000ஐ எட்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டுமே 12,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க இடப் பாற்றாக்குறை இருப்பதால் நேரு உள் விளையாட்டு அரங்கம் கொரோனா வார்டாக மாற்றப்பட்டு வருகிறது. அதே போல நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டத்தின் படி, சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு மக்களை காக்க சென்னை மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகிறது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 8 பேர் பலி!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் எட்டு பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதனால், சென்னையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது.