நிலஅளவையர் உள்பட 8 ஊழியர்களுக்கு கொரோனா… கொடுமுடி தாலுகா அலுவலகம் மூடல்…

 

நிலஅளவையர் உள்பட 8 ஊழியர்களுக்கு கொரோனா… கொடுமுடி தாலுகா அலுவலகம் மூடல்…

ஈரோடு

கொடுமுடி தாலுகா அலுவலகத்தில் நில அளவையர் உள்ளிட்ட 8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தாலுகா அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு தேர்தல் பணிக்காக செல்வதற்கு முன், சுகாதாரத்துறை சார்பில் முகாம் அமைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிலஅளவையர் உள்பட 8 ஊழியர்களுக்கு கொரோனா… கொடுமுடி தாலுகா அலுவலகம் மூடல்…

இந்த நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு சென்று திரும்பிய பணியாளர்களுக்கு கடந்த சனிக்கிழமை மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியானதில், கொடுமுடி தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் நில அளவையாளர், சிவில் சப்ளை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் என 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, தொற்றுக்குள்ளான அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாலுகா அலுவலகத்தில் கிருமிநாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. மேலும், 8 ஊழியர்களுக்கு தொற்று உறுதியானதால், கொடுமுடி தாலுகா அலுவலகம் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக தாசில்தார் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.