‘8 மாத கர்ப்பிணி’ கணவருடன் தற்கொலை: திருப்பூர் அருகே நேர்ந்த சோகம்!

 

‘8 மாத கர்ப்பிணி’ கணவருடன் தற்கொலை: திருப்பூர் அருகே நேர்ந்த சோகம்!

திருப்பூர் அருகே திருமணமாகி 2 வருடத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே வசித்து வந்த தம்பதி பாலமுருகன்(31) – கவிதா (21). பாலமுருகன் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கவிதா 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர்களின் வீட்டிற்கு அருகிலேயே பாலமுருகனின் சகோதரர் கார்த்திகேயன் தனது மனைவியுடன் வசித்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், கார்த்திகேயன் பாலமுருகனுக்கு செல்போனில் அழைப்பு விடுத்திருக்கிறார்.

‘8 மாத கர்ப்பிணி’ கணவருடன் தற்கொலை: திருப்பூர் அருகே நேர்ந்த சோகம்!

பல முறை முயற்சித்தும் அதனை பாலமுருகன் எடுக்காததால், சந்தேகமடைந்த கார்த்திகேயன் நேரில் சென்று பார்த்திருக்கிறார். அப்போது, அவர்கள் வீடு உள் பக்கமாக பூட்டியிருந்ததால், கதவை உடைத்து திறந்து உள்ளே பார்க்கையில் இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து அங்கு நடத்திய சோதனையில், கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், ‘தங்களின் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை’ என எழுதப்பட்டிருந்துள்ளது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். மேலும், திருமணமாகி 2 வருடத்திலேயே உயிரிழந்திருப்பதால் இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.