8 மாத குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

 

8 மாத குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

மேகாலயாவில் 8 மாத குழந்தை கொரோனாவால் உயிரிழந்துள்ளது.

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அக்குழந்தை கடுமையான காய்ச்சல் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அங்கிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மேகாலயா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

8 மாத குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

மேகாலயாவில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால் கொரோனா உறுதியான சில மணி நேரங்களிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேகாலயாவில் கொரோனாவால் நிகழ்ந்துள்ள இரண்டாவது உயிரிழப்பு இது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.