ஆந்திராவில் பயங்கர விபத்து; சென்னையை சேர்ந்த 8 பேர் பலி!!

 

ஆந்திராவில் பயங்கர விபத்து; சென்னையை சேர்ந்த 8 பேர் பலி!!

ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் பயங்கர விபத்து; சென்னையை சேர்ந்த 8 பேர் பலி!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லூர் அருகே புஜ்ஜிரெட்டிப்பாளையத்தில் லாரி மீது வேன் மோதியதில் 5 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் . விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் பயங்கர விபத்து; சென்னையை சேர்ந்த 8 பேர் பலி!!

சென்னை பெரம்பூரில் சேர்ந்த 15 பேர் டெம்போ டிராவலர் வேனில் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். கன்னூல் மாவட்டத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது தாமரமடகு ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை திரும்பி கொண்டிருந்த போதுதான் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து நெல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.