கர்நாடகாவில் லாரி வெடித்து 8 பேர் பலி : பிரதமர் மோடி இரங்கல்!

 

கர்நாடகாவில் லாரி வெடித்து 8 பேர் பலி : பிரதமர் மோடி இரங்கல்!

கர்நாடகா மாநிலம் சிவமோகா அருகே ஹுனாரோடு கிராமத்தில் லாரியில் இருந்த வெடிகள் வெடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் லாரி வெடித்து 8 பேர் பலி : பிரதமர் மோடி இரங்கல்!

ரயில்வேக்கு சொந்தமான கல்குவாரிக்கு லாரியில் வெடிகளை ஏற்றி சென்றபோது எதிர்பாராதவிதமாக விபத்து நடந்துள்ளது. பயங்கர சத்தத்துடன் நேற்றிரவு நிகழ்ந்த இந்த விபத்தின் காரணமாக 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் அருகில் இருந்த வீடுகளில் ஜன்னல் கதவுகள் உடைந்துள்ளது. வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்கள் நிலநடுக்கம் தான் வந்துவிட்டதோ என்று எண்ணி அச்சத்தில் சாலைக்கு ஓடி வந்துள்ளனர். அத்துடன் இந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லாரி வெடித்து சிதறியதால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகா சிவமோகாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.