நள்ளிரவில் ஆடுகளை கடித்துக் கொன்ற வெறிநாய்கள்: 8 ஆடுகள் உயிரிழப்பு!

 

நள்ளிரவில் ஆடுகளை கடித்துக் கொன்ற வெறிநாய்கள்: 8 ஆடுகள் உயிரிழப்பு!

கன்னியாகுமரி அருகே வெறிநாய் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் வசித்து வருபவர் அஜினா அகமத். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். வழக்கமாக ஆடுகளை, இரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே இருக்கும் கொட்டகைக்குள் அடைத்து விடுவாராம். அதே போல, நேற்றும் அவர் ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு தூங்கச் சென்றிருக்கிறார்.

நள்ளிரவில் ஆடுகளை கடித்துக் கொன்ற வெறிநாய்கள்: 8 ஆடுகள் உயிரிழப்பு!

இன்று காலை கொட்டகையை அஜினா திறந்து பார்த்த போது, 8 ஆடுகள் கழுத்தில் காயமடைந்த நிலையில் இருந்து கிடந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அஜினா, அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர்கள், அதிகாலை வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது இப்பகுதியில் வெறிநாய்கள் சுற்றித் திரிந்ததாகவும் வெறிநாய்கள் தான் ஆடுகளை கடித்திருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

ஆடுகளை வெறிநாய்கள் கடித்துக் கொன்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெறிநாய்கள் மக்களையும் தாக்கும் என்பதால் பிடித்துச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.