சென்னை வந்தடைந்தனர் மியான்மரில் மீட்கப்பட்ட மீனவர்கள்!

 

சென்னை வந்தடைந்தனர் மியான்மரில் மீட்கப்பட்ட மீனவர்கள்!

விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன 8 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்.

கடந்த ஜூலை மாதம் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 9 பேர் மாயமானதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அந்த மீனவர்களை தேடும் பணியில் இறங்கிய தமிழக அரசு அவர்கள் மியான்மரில் தஞ்சம் அடைந்திருப்பதை கண்டறிந்த நிலையில், அவர்களை மீட்கும் பணியை தீவிரப்படுத்தியது. அதன் படி, இன்று காலை மியான்மரில் மீட்கப்பட்ட 8 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

சென்னை வந்தடைந்தனர் மியான்மரில் மீட்கப்பட்ட மீனவர்கள்!

அந்த 8 மீனவர்களையும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மியான்மரில் ஏற்பட்ட படகு விபத்து ஒன்றில் இவர்களுடன் சென்ற மீனவர் பாபு மாயமாகிவிட்டதாகவும் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருவாதாகவும் தெரிவித்தார்.