விவசாய நிலத்தில் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

 

விவசாய நிலத்தில் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

தர்மபுரி

தர்மபுரி அருகே விவசாய நிலத்தில் புகுந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை தீயணைப்புத் துறையினர் மீட்டு, காப்புக்காட்டில் விட்டனர். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ளது திம்லாமேடு கிராமம். இந்த பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் தனது விவசாய நிலத்தில் கால்நடை தீவனப்புல் பயிரிட்டு வளர்த்து வருகிறார்.. இன்று காலை கால்நடைகளுக்கு தீவன புல் அறுக்க சென்றபோது, அங்கு மலைப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

விவசாய நிலத்தில் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

பின்னர், இதுகுறித்து பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விவசாய நிலத்தில் பதுங்கியிருந்த சுமார் 8 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர், அதனை அருகிலுள்ள பெல்ரம்பட்டி காப்புக்காட்டில் கொண்டு விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.