மேற்கு வங்கத்தில் 8 கட்ட தேர்தல்; அசாமில் 3 கட்ட தேர்தல்

 

மேற்கு வங்கத்தில் 8 கட்ட தேர்தல்; அசாமில் 3 கட்ட தேர்தல்

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று ஒரேநாளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

மேற்கு வங்கத்தில் 8 கட்ட தேர்தல்; அசாமில் 3 கட்ட தேர்தல்

அசாம் மாநிலத்திற்கு மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்திற்கு 8 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஐந்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை மே-2ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 8 கட்ட தேர்தல்; அசாமில் 3 கட்ட தேர்தல்

மேற்கு வங்கத்தில் மார்ச் 27, ஏப்ரல்1, 6, 10, 17, 22, 26, 29 தேதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

அசாமில் மார்ச் 27, ஏப்ரல்1 மற்றும் 6 தேதிகளில் 3 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் விபரங்களை அறிவித்தார்.