8 மாடியில் இருந்து குதித்து மூவர் தற்கொலை… ஒன்றாக தகனம் செய்ய கடைசி வேண்டுகோள்!

 

8 மாடியில் இருந்து குதித்து மூவர் தற்கொலை… ஒன்றாக தகனம் செய்ய கடைசி வேண்டுகோள்!

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள காசியாபாத் நகரத்திலுள்ள இந்திராபுரம் பகுதியில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியும் மற்றொரு பெண்ணும் அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள காசியாபாத் நகரத்திலுள்ள இந்திராபுரம் பகுதியில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியும் மற்றொரு பெண்ணும் அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

sucide

முதற்கட்ட விசாரணையின்போது அந்த நபர் தனது  இரண்டு குழந்தைகளையும் அவர்கள் தூங்கும்போது கொலை செய்தது தெரியவந்துள்ளது.இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி “காலை 5 மணியளவில் பலத்த சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தால்   இரண்டு பேரும் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்”என்று அதிர்ச்சி விலகாமல் சொல்லியிருக்கிறார்.

house

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த  போலீசார் வந்து ஆய்வு  நடத்தியதில் தற்கொலைக்கு குடும்ப வறுமை காரணம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.இந்தக் குடும்பம் இந்திராபுரம் குடியிருப்பிற்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்தான் குடிவந்திருக்கிறார்கள்,தம்பதிகளோடு சேர்ந்து குதித்த மற்றொரு பெண் இறந்தவரின் 2வது மனைவி என்பதும் தெரியவந்திருக்கிறது

photo

இறந்தவர்களின் குடியிருப்பை திறந்து ஆய்வு செய்தபோது, குழந்தைகள் கொல்லப்பட்டு இருந்ததும், தங்கள் இறப்பிற்கு காரணம் ‘குடும்ப வறுமையே’ என இந்தியில் எழுதப்பட்டிருந்த கடிதமும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தவிர,போலீசார் குழந்தைகளின் அறையை சோதனை செய்தபோது, சுவரில் தங்களின் தற்கொலைக்கான காரணமும், தங்கள் உறவினர்களின் எண்களும் எழுதப்பட்டிருந்தன, மேலும் தங்களை ஒன்றாக தகனம் செய்யப்படவேண்டும் என்று எழுதப்பட்டு இருந்தது என போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.