விடிய விடிய அடித்து சித்திரவதை -7வயது குழந்தை உயிரிழந்தது

 

விடிய விடிய அடித்து சித்திரவதை -7வயது குழந்தை உயிரிழந்தது

ஏழு வயது குழந்தைக்கு பேய் பிடித்து விட்டதாக சொல்லி மூன்று பெண்கள் பேயை விரட்டுகிறேன் என்ற பெயரில் அக்குழந்தையை இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். விடிய விடிய அடித்து சித்திரவதை செய்ததில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

விடிய விடிய அடித்து சித்திரவதை -7வயது குழந்தை உயிரிழந்தது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பேயை விரட்டுகிறோம் என்று குழந்தையை அடித்து துன்புறுத்தி கொலை செய்த கே.வி.குப்பத்தை சேர்ந்த மூன்று பெண்களிடமும் கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திலகவதி(30 ), பாக்கியலட்சுமி(28 ), கவிதா(30 ) ஆகிய மூன்று பெண்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.

இந்த காலத்திலும் இன்னும் பேய் விரட்டுகிறேன் என்று மூடநம்பிக்கையுடன் இருக்கின்றனர். அவர்கள் சொன்னதை நம்பி குழந்தையை பரிகொடுத்துவிட்டு நிற்கின்றனரே என்று பெற்றோரை பார்த்து கேட்கின்றனர் அப்பகுதியினர்.