வேளச்சேரியில் இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது

 

வேளச்சேரியில் இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது

வேளச்சேரியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் வாக்குச்சாவடி 92ல் இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

கடந்த ஏப்ரல் 6ம் தேதி அன்று நடந்த வாக்குப்பதிவின் போது சென்னை வேளச்சேரி தொகுதியில் வாக்குச்சாவடி எண் 92ல் நடைபெற்ற பின்னர், இரண்டு பயன்படுத்தப்படாத மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாடு எந்திரம் ஆகியவற்றை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச்சென்றனர்.

வேளச்சேரியில் இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது

15 வாக்குகள் பதிவான நிலையில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. ஆனாலும் அவற்றை வாக்கு எண்ணும் மையத்திற்கு மண்டல குழுக்களை சேர்ந்தவர்கள்தான் எடுத்து செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றது தவறு.

இதனால் எழுந்த சர்ச்சையினால் வாக்குசாவடி எண் 92ல் வரும் சனிக்கிழமை ஏப்ரல் 17ம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மறு வாக்குப்பதிவு குறித்து அப்பகுதியில் ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

நாளை மறுநாள் வாக்குப்பதிவு சிசிடிவி கேமரா பதிவுடன் நடைபெற இருக்கிறது. இந்த மறுவாக்குப்பதிவில் 548 பேர் வாக்களிக்க இருக்கிறார்கள்.