ஐ.டி. பெண்கள்தான் இலக்கு! 7வது பெண்ணுக்கு ஸ்கெட்ச் போட்டபோது சிக்கிய ஐடி மன்மதன்!

 

ஐ.டி. பெண்கள்தான் இலக்கு! 7வது பெண்ணுக்கு ஸ்கெட்ச் போட்டபோது சிக்கிய ஐடி மன்மதன்!

ஐ.டி. பெண்களாக குறிவைத்து இதுவரைக்கும் 6 பெண்களை வேட்டையாடி வந்த ஐடி இளைஞர், 7 பெண்ணுக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொண்டிருந்தபோது பாதிக்கப்பட்ட 6 பெண்ணால் போலீசில் வசமாக சிக்கி, 6வது பெண்ணின் காலில் விழுந்து கதறியிருக்கிறார்.

ஐதராபாத் சந்தாநகரில் வசிக்கும் விஜயபாஸ்கர் ஐ.டி.யில் வேலை பார்க்கிறார். கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட இவருக்கு, முதல் மனைவி அலுத்துப்போகவே, அடுத்தடுத்த பெண்களை தேடியிருக்கிறார். அத்துடன் பண ஆசையும் அவரை ஆட்டிப்படைத்திருக்கிறது.

ஐ.டி. பெண்கள்தான் இலக்கு! 7வது பெண்ணுக்கு ஸ்கெட்ச் போட்டபோது சிக்கிய ஐடி மன்மதன்!

பெண்கள் வேண்டும்; அதே நேரத்தில் பணமும் வேண்டும் என்பதால், ஐடி பெண்களாக பார்த்து குறிவைத்திருக்கிறார். முதலில் நட்பாக பேசி பின்னர் அப்பெண்களை காதலித்து, திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்து, நெருக்கமாக இருந்து, நகை மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு எஸ்கேப் ஆவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார் விஜயபாஸ்கர்.

ஐ.டி. பெண்கள்தான் இலக்கு! 7வது பெண்ணுக்கு ஸ்கெட்ச் போட்டபோது சிக்கிய ஐடி மன்மதன்!

ஆந்திரா ஓங்கோலை சேர்ந்த சௌஜன்யாதான் விஜயபாஸ்கர் வலையில் சிக்கிய 6வது பெண். அவரையும் காதலித்துவிட்டு பணம், நகைகளை கறந்துவிட்டு கழற்றிவிட பார்த்த விஜயபாஸ்கரை விடவில்லை சௌஜன்யா. சாமர்த்தியமாக இருந்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு விஜயபாஸ்கர் அடிக்கடி காருக்குள் சென்று உட்கார்ந்துகொள்வதால் சௌஜன்யாவுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. மறைந்து நின்று கவனித்தபோதூ காருக்குள் உட்கார்ந்து கொண்டு பெண்களிடம் வீடியோ காலில் பேசிவருவது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஐ.டி. பெண்கள்தான் இலக்கு! 7வது பெண்ணுக்கு ஸ்கெட்ச் போட்டபோது சிக்கிய ஐடி மன்மதன்!

விஜயபாஸ்கரின் செல்போனை எடுத்து பார்த்ததில், சிவானி என்ற பெண்ணுக்கு தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்தது.

இந்த விபரத்தை குடும்பத்தாரிடம் சொல்லி அழுதிருக்கிறார் சௌஜன்யா. குடும்பத்தினர் விஜயபாஸ்கரை பிடித்து அடித்து, உதைத்ததில் உண்மையை கக்கியிருக்கிறார். 7வதாக சிவானிக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொண்டிருந்ததை சொல்லிவிட்டு, இனிமேலும் அடி தாங்க முடியாது என்று சௌஜன்யாவின் காலில் விழுந்து கதறியிருக்கிறார்.

ஐ.டி. பெண்கள்தான் இலக்கு! 7வது பெண்ணுக்கு ஸ்கெட்ச் போட்டபோது சிக்கிய ஐடி மன்மதன்!

அதன்பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். விஜயபாஸ்கரால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து புகார்களை வாங்கி வருகிறார்கள் போலீசார். அப்புகார்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஐடி மன்மதனை சிறையில் அடைக்க திட்டமிள்ளனர் போலீசார்.