ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.79 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் துவக்கம்
Oct 24, 2020, 16:03 IST1603535588000
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.79 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம் மற்றும் தென்னரசு ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இதன்படி, தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் சாலை சீரமைப்பு பணி, காமராஜர் நகரில் பல்நோக்கு கட்டிடம், பூம்புகார் நகரில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தனர்.
மேலும், வீரப்பன்சத்திரம் அம்பேத்கர் நகர் மற்றும் எல்.ஜி.எஸ் காலனி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, அவர்கள் திறந்து வைத்தனர்.