“சொத்து கொடு ,இல்லேன்னா செத்து விடு” -என சாலையில் வீசப்பட்ட கோடீஸ்வர பாட்டி

 

“சொத்து கொடு ,இல்லேன்னா செத்து விடு” -என சாலையில் வீசப்பட்ட  கோடீஸ்வர பாட்டி

ஒரு 78 வயதான விதவை பாட்டியை சொத்து கேட்டு அவரின் பேரனும் ,மருமகளும் சாலையில் வீசிய சம்பவம் பலரை அதிர செய்துள்ளது

“சொத்து கொடு ,இல்லேன்னா செத்து விடு” -என சாலையில் வீசப்பட்ட  கோடீஸ்வர பாட்டி

மகாராஷ்டிராவின்  புனேவில் உள்ள உத்தமநகர் பகுதியில் 78 வயதான விதவை பாட்டிக்கு கோடிக்கணக்கில் மதிப்புள்ள இரண்டு வீடுகள் இருந்தன .அதில் ஒரு வீட்டினை அந்த பாட்டி தன்னுடைய பெரிய மகனுக்கு கொடுத்து விட்டு,இன்னொரு வீட்டில் தன்னுடைய அடுத்த மகனோடும் ,மருமகளோடும் மற்றும் பேரனோடு வசித்துவந்தார் .அந்த பாட்டியின் கணவர் சமீபத்தில் இறந்து விட்டார் .அதனால் அந்த பாட்டி விதவையானார் .இந்நிலையில் அந்த பாட்டியிடம் அவரின் பேரனும் அவரின் மருமகளும், அவர் பெயரிலிருக்கும் வீட்டை தங்களின் பெயரில் மாற்றி தருமாறு டார்ச்சர் செய்தனர் .

ஆனால் அந்த பாட்டி அதற்கு மறுத்து வந்தார் .இந்நிலையில் கடந்த வாரம் அவரின் மகன் வெளியே போயிருந்தார் .அப்போது அந்த பாட்டியின் பேரனும் ,மருமகளும் சொத்து கேட்டு அவரை டார்ச்சர் செய்தனர் .அதனால் நடந்த  சண்டையில் அந்த பாட்டியை தூக்கி சாலையில் வீசிவிட்டனர் .அதன் பிறகு அந்த பாட்டி அங்குள்ள காவல் நிலையம் சென்று அந்த பேரன் மற்றும் மருமகள் மீது புகாரளித்தார் .பொலிஸார் வழக்கு பதிந்து அந்த பாட்டியின் உறவினர்களை அழைத்து விசாரித்து வருகின்றனர்