வேலூரில் 75 வயது முதியவர் கொரோனாவால் பலி: பாதிப்பு எண்ணிக்கை 354 ஆக உயர்வு!

 

வேலூரில் 75 வயது முதியவர் கொரோனாவால் பலி: பாதிப்பு எண்ணிக்கை 354 ஆக உயர்வு!

வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த 75 வயது முதியவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி முதியவர் மரணம் அடைந்தார். அவர் இறந்த பிறகு தான் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வேலூரில் 75 வயது முதியவர் கொரோனாவால் பலி: பாதிப்பு எண்ணிக்கை 354 ஆக உயர்வு!

இதனால் முதியவர் வசித்த பகுதி முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே வேலூரில் கொரோனா தொற்றால் 4 பேர் பலியான நிலையில் முதியவரின் இறப்பின் மூலம் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

வேலூரில் 75 வயது முதியவர் கொரோனாவால் பலி: பாதிப்பு எண்ணிக்கை 354 ஆக உயர்வு!

மேலும் நேற்று ஒரு நாளில் வேலூர் மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 354 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.