மலைக்கிராமங்களில் இருந்த 7,500 லி. சாராய ஊறல் அழிப்பு

 

மலைக்கிராமங்களில் இருந்த 7,500 லி. சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலைப் பகுதியில் சட்டவிரோதமாக காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த 7,500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.

மலைக்கிராமங்களில் இருந்த 7,500 லி. சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் சட்ட விரோதமாக காய்ச்சப்படும் கள்ளச்சாராயத்தை முற்றிலும் அழிக்கும் நோக்கோடு, மாவட்ட எஸ்.பி ஜியாஉல்ஹக் உத்தரவின் பேரில் மலைக்கிராமங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பொரசம்பட்டு, தாழ்தேவனூர், கோனாங்காடு, வாழைக்குழி ஆகிய மலைக் கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த சாராய ஊறல்களை கொட்டி அழித்தனர். மேலும், இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

மலைக்கிராமங்களில் இருந்த 7,500 லி. சாராய ஊறல் அழிப்பு