சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழப்பு!

 

சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழப்பு!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் குமரி நகரை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி தாசம்மாள்.(75). இவர் சம்பவத்தன்று வீட்டின் சமையல் அறையில் சமையல் செய்த கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தாசம்மாளின் சேலையில் தீப் பற்றியது.

சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழப்பு!

சிறிது நேரத்தில் உடல் முழுவதும் தீ பரவி பற்றி எரிந்தது. இதில்,பலத்த தீக்காயம் அடைந்த மூதாட்டியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மூதாட்டி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கருங்கல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.