75 வருடங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் முதல் நிகழ்வு இது!

 

75 வருடங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் முதல் நிகழ்வு இது!

பாட்டன், தாத்தா, ஐந்து தாய் மாமாக்களுக்குப் பிறகு, இப்போதுதான் முதன்முறையாக ராஜ்குமார் குடும்பத்தில் இருந்து பெண் ஒருவர் நடிக்க வந்திருக்கிறார். ராஜ்குமாரின் மகள் பூர்ணிமாவின் மூத்த மகள்தான் இந்த தான்யா ராஜ்குமார்.

சூப்பர் ஸ்டாருக்கு ரெண்டு பொண்ணுங்க, ரெண்டு பொண்ணுங்களுக்கும் சேர்த்து மொத்தமே மூணு பேரப்பசங்கதானே, பேத்தி எதுவும் இதுவரைக்கும் பொறக்கலையே’ என குழம்ப வேண்டாம். நாங்க சொல்ற இந்த சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டாருக்கே சூப்பர் ஸ்டார். ஆம், கன்னட எவர்க்ரீன் சூப்பர் ஸ்டார் (வீரப்பன்) ராஜ்குமாரின் பேத்தி தான்யா சினிமாவுக்குள் தொபுக்கடீர் என்று குதித்திருக்கிறார். ராஜ்குமாரின் தந்தை சிங்கநல்லூரு புட்டஸ்வாமியாவும் நடிகர்தான். ராஜ்குமாரின் ஐந்து மகன்களும் நடிகர்கள்தான். நடிகரின் மருமகனும் (மகளை மணந்த மாப்பிள்ளை)  நடிகர்தான். ராஜ்குமாரின் இன்னொரு மருமகன் (மைத்துனரின் மகனும்) நடிகர்தான். ஆக, கன்னட திரையுலகில் ராஜ்குமார் குடும்பம் இல்லாத சினிமா பார்க்கவேண்டும் என்றால், தியேட்டருக்குப் போய் வெறும் ஸ்க்ரீனைத்தான் பார்க்கவேண்டும்.

Dhanya Rajkumar

பாட்டன், தாத்தா, ஐந்து தாய் மாமாக்களுக்குப் பிறகு, இப்போதுதான் முதன்முறையாக ராஜ்குமார் குடும்பத்தில் இருந்து பெண் ஒருவர் நடிக்க வந்திருக்கிறார். ராஜ்குமாரின் மகள் பூர்ணிமாவின் மூத்த மகள்தான் இந்த தான்யா ராஜ்குமார். கமலின் உத்தம வில்லன் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சுமன் இயக்குநராக அறிமுகம் ஆகும் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார் தான்யா. ரொமான்டிக் காமெடியாக உருவாக இருக்கும் படத்தின் பெயர் ‘நின்னா சனிஹகே’. சொல்ல மறந்துட்டேன், தான்யாவின் தம்பி தீரண், தாரி தப்பிடா மகா படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆகவிருக்கிறார்.