720 டன் அமோனியம் நைட்ரேட் மணலியில் பத்திரமாக உள்ளது… சென்னை சுங்கத்துறை விளக்கம்

 

720 டன் அமோனியம் நைட்ரேட் மணலியில் பத்திரமாக உள்ளது… சென்னை சுங்கத்துறை விளக்கம்

லெபனான் அமோனியம் நைட்ரேட் வெடிவிபத்தைப் போன்ற சம்பவம் சென்னையில் அப்படி நடக்க வாய்ப்பில்லை, அமோனியம் நைட்ரேட் மிகவும் பாதுகாப்பான முறையில் மணலியில் வைக்கப்பட்டுள்ளது என்று சுங்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

720 டன் அமோனியம் நைட்ரேட் மணலியில் பத்திரமாக உள்ளது… சென்னை சுங்கத்துறை விளக்கம்

லெபனான் தலைநகர் பைரூட்டில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து வைத்திருந்த அமோனியம் நைட்ரேட் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 2,750 டன் அளவுக்கு அமோனியம் நைட்ரேட் அங்கு இருந்ததாகவும் இதன் காரணமாக மிகப்பெரிய விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விவசாயத்திற்கு உரம் தயாரிக்கவும், வெடி மருந்து தயாரிக்கவும் அமோனியம் நைட்ரேட் அதிக அளவில் பயன்படுகிறது.

720 டன் அமோனியம் நைட்ரேட் மணலியில் பத்திரமாக உள்ளது… சென்னை சுங்கத்துறை விளக்கம்

இந்த நிலையில் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை பலரும் கிளப்பினர். லெபனான் தலைநகர் பைரூட்டில் நடந்தது போன்ற சம்பவம் சென்னையில் நடக்க வாய்ப்புள்ளது போன்ற பீதியை சில ஊடகங்கள் கிளப்பின.
இந்த நிலையில் இது தொடர்பாக சுங்கத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அமோனியம் நைட்ரேட் குறித்து பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆறு ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் மணலி சுங்கத்துறை கிடங்கில் பாதுகாப்பாக உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் சைட்ரேட் மின்னணு முறையில் ஏலம் விடப்படும். மணலி சுங்கத்துறை கிடங்கைச் சுற்றி வீடுகள் எதுவும் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. 740 டன் அமோனியம் நைட்ரேட் மணலியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.