புதுச்சேரியில் மேலும் 72 பேருக்கு கொரோனா; பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

 

புதுச்சேரியில் மேலும் 72 பேருக்கு கொரோனா; பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அங்கு முதல்வர் நாராயணசாமியின் உத்தரவின் படி புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் அங்கு பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது.

புதுச்சேரியில் மேலும் 72 பேருக்கு கொரோனா; பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

புதுச்சேரியில் நேற்று முன்தினம் இதுவரை இல்லாத அளவுக்கு மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று பரவியதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,151 ஆக உயர்ந்து. மேலும், புதுச்சேரியில் கொரோனாவில் இருந்து 584 பேர் குணமடைந்த நிலையில், 553 பேர் சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,272 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காரைக்காலில் உடல்நிலை சரியில்லாமல் இறந்த பெண்ணுக்கு கொரோனா உறுதியானதால் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாகவும் 618 பேர் சிகிச்சையிலும் 637 பேர் குணமடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.