பரமக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி

 

பரமக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி

ராமநாதபுரம்

பரமக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கே.வலசை கிராமத்தை சேர்ந்தவர் சூசைமாணிக்கம் (71). இவரது மகன் பெலிக்ஸ் பாக்கியம். நேற்று தந்தை – மகன் இருவரும் பரமக்குடியில் காய்கறி வாங்கி கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

பரமக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி

பொட்டிதட்டி பகுதியில் சென்றபோது வாகனத்தில் இருந்த காய்கறி பை தவறி விழுந்துள்ளது. சூசைமாணிக்கம் அதை பிடிக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்து இருவரும் தவறி விழுந்தனர். இதில் அவர்களுக்கு பலத்த ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சூசை மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சத்திரக்குடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்