மதுரவாயல் மேம்பாலத்தில் இருந்து குதித்து 70 வயது முதியவர் தற்கொலை
சென்னை
சென்னை மதுரவாயல் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து 70 வயது முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நௌம்பூர் பகுதியை சேர்ந்தவர் 70 வயது முதியவர் ராமச்சாரி. இவர் அதே பகுதியில் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இ்ந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ராமாச்சாரி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நண்பர்களிடம், தான் குடும்பத்திற்கு பாராமாக இருப்பதாகவும் கூறி அடிக்கடி வேதனை தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று மதுவாரயல் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மதுரவாயல் போலீசார், உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.