உயிர் போகும் நிலையில் உருவான காதல் -தாத்தாவின் காதலை சேர்த்து வைத்த பேரன்கள்

 

உயிர் போகும் நிலையில் உருவான காதல் -தாத்தாவின் காதலை சேர்த்து வைத்த பேரன்கள்

70 வயது தாத்தாவுக்கு அவரின் பிள்ளைகள்,பேரன்கள் அனைவரும் சேர்ந்து,அவரின் 55 வயது காதலியோடு திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரின் மனதை நெகிழ செய்துள்ளது.

உயிர் போகும் நிலையில் உருவான காதல் -தாத்தாவின் காதலை சேர்த்து வைத்த பேரன்கள்


மத்தியபிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உம்ராசிங் என்ற 70 வயது நபருக்கு 4 பிள்ளைகள் ,12 பேரக்குழந்தைகள் .ஆனால் அவரின் மனைவி உயிரோடு இல்லாததால் ,பிள்ளைகள் அனைவருக்கும் கல்யாணம் ஆகி விட்டதாலும் ,அவர் தனிமையில் வாடியதால் அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது .இதனால் அவரை அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .
அப்போது அந்த மருத்துவமனைக்கு இவரைப்போலவே கணவனை இழந்து பிள்ளைகள் கை விட்டதால் தனிமையில் வாடிய 55 வயது பெண் குட்புடி என்பவர் சிகிச்சைக்கு வந்தார் .
அப்போது இருவரும் அந்த மருத்துவமனையில் தங்களின் சோகக்கதைகளை பகிர்ந்து கொண்டனர் .அப்போது இருவரும் ஏறத்தாழ ஒரே நிலையில் இருந்ததால் இருவருக்கும் இந்த வயதான காலத்தில் காதல் உண்டானது .இதனால் இருவரும் அங்கு மனம் விட்டு பேசி, திருமணம் செய்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்க முடிவு செய்தனர் .
பிறகு இருவரும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியதும் நேராக உம்ரான் சிங் தன்னுடைய காதலியை தன்னுடைய பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைத்ததும், பிள்ளைகள் , பேரன்கள் அனைவரும் சேர்ந்து அவர்களுக்கு கோலாகலமாக அந்த ஊரே மெச்சுமளவுக்கு திருமணம் செய்து வைத்தனர் .

உயிர் போகும் நிலையில் உருவான காதல் -தாத்தாவின் காதலை சேர்த்து வைத்த பேரன்கள்