ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த 70 வயது முதியவர் கொலை : 26 வயது இளைஞர் கைது!

 

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த 70 வயது முதியவர் கொலை : 26 வயது இளைஞர் கைது!

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த முதியவரை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் தேனியில் அரங்கேறியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் பொன்ராம் (70) இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். அவரது ஆடைகளும் கலைந்திருந்துள்ளன. இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகள் மாரியம்மாள் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த 70 வயது முதியவர் கொலை : 26 வயது இளைஞர் கைது!

இதை தொடர்ந்து தேனி மருத்துவமனையில் முதியவர் பொன்ராமின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் போலீசார் விசாரணையை தீவிரமாக்க விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி 26 வயதான அருண்குமார் என்பவர் சிக்கியுள்ளார்.

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த 70 வயது முதியவர் கொலை : 26 வயது இளைஞர் கைது!

அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், அருண்குமாரும் அவரது நண்பரும் ஓரின சேர்க்கையாளர்களாக இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் முதியவரின் வீட்டின் அருகே அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து அருண்குமாரின் நண்பருக்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது.

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த 70 வயது முதியவர் கொலை : 26 வயது இளைஞர் கைது!

இதனால் விரக்தியில் இருந்த அவர் மதுபோதையில் தனியாக இருந்த முதியவர் பொன்ராமிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது பொன் ராம் கத்தவே அவரை கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அருண்குமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.