அரக்கோணம் அருகே வீடு புகுந்து முதியவர் வெட்டிக்கொலை!

 

அரக்கோணம் அருகே வீடு புகுந்து முதியவர் வெட்டிக்கொலை!

ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவர் மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் கிராமத்தை சேர்ந்தவர் வரதன் (70). விவசாயி. இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், வீட்டில் தனியே வசித்து வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் வரதன் வீட்டின் கதவு திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, வரதன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.

அரக்கோணம் அருகே வீடு புகுந்து முதியவர் வெட்டிக்கொலை!

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், தக்கோலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தது சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் பொருட்கள் திருடப்படாத நிலையில், சொத்துக்காக கொலை நடந்ததா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.