தொழிலதிபர் வீட்டில் 70 சவரன் நகைகள், ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளை

 

தொழிலதிபர் வீட்டில் 70 சவரன் நகைகள், ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளை

விருதுநகர்

அருப்புக்கோட்டையில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகைகள் மற்றும் ஒன்றரை லட்சம் பணம் கொள்ளைடியக்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநர் மாவட்டம் அருப்புக்கோட்டை அன்புநகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலபதிர் நாகநாதன். இவர் அதேபகுதியில் இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நாகநாதன் நேற்று உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார்.

தொடர்ந்த, அவரது மகள் சுகி மாலையில் வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்துகிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்றபோது, மர்மநபர்கள் இருவர் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியோடியதை பார்த்தார்.

தொழிலதிபர் வீட்டில் 70 சவரன் நகைகள், ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளை

இதுகுறித்து அவர் நாகநாதனுக்கு தகவல் அளித்த நிலையில், அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து, கொள்ளை சம்பவம் குறித்து அவர் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை மேற்கொண்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.