திருவாரூரில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : வளையல் வியாபாரியை அடித்து போலீசில் ஒப்படைத்த ஊர்மக்கள்!

 

திருவாரூரில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : வளையல் வியாபாரியை அடித்து போலீசில் ஒப்படைத்த ஊர்மக்கள்!

திருவாரூரில் 7 வயது சிறுமிக்கு வளையல் வியாபாரி பாலியல் தொல்லை கொடுத்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : வளையல் வியாபாரியை அடித்து போலீசில் ஒப்படைத்த ஊர்மக்கள்!

சமீபகாலமாக சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கும் சம்பவம் தமிழகத்தில் தொடர்கதையாகி உள்ளது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 7 வயது சிறுமி தனது வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வடகண்டம் பகுதியை சேர்ந்த வளையல் வியாபாரி கதிரேசன் சிறுமியை அப்பகுதியில் தனியாக உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு விட்டுச் சென்றுள்ளார்.

திருவாரூரில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : வளையல் வியாபாரியை அடித்து போலீசில் ஒப்படைத்த ஊர்மக்கள்!
குழந்தையை நீண்ட நேரமாக காணவில்லை என சிறுமியின் பெற்றோர் தேடி வந்த நிலையில் வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்ததை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், ஊர் மக்களும் வளையல் வியாபாரி தேடிப் பிடித்து அவரை நன்னிலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நன்னிலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.