7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த கல்லூரி மாணவன்!

 

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த கல்லூரி மாணவன்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே 7 வயது சிறுமியை பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மல்லிகைநத்தம் பகுதியில் கடந்த 23ம் தேதி வீட்டினுள் இருந்த 7 வயது சிறுமியை அவர்களின் வீட்டருகே வசிக்கும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கல்லூரி படித்து வரும் 20 வயது இளைஞர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சிறுமியின் உடலில் காயம் மற்றும் வலி இருந்ததையடுத்து சந்தேகம் அடைந்த அவரது தாய் சிறுமியிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போது அந்த சிறுமியை அரவிந்த் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது.

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த கல்லூரி மாணவன்!

இதனையடுத்து சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்த அவரது தாய் இச்சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதன் பேரில் வழக்கு பதிவு செய்த கந்தர்வகோட்டை போலீசார் அரவிந்தை தேடியபோது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு என்பதால் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் போஸ்கோ சட்டத்தின்கீழ் அரவிந்தை தேடி வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கந்தர்வகோட்டை போலீசார் அரவிந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.