பட்டாசு வெடித்தபோது விபத்து – 7 வயது சிறுவன் உயிரிழப்பு

 

பட்டாசு வெடித்தபோது விபத்து – 7 வயது சிறுவன் உயிரிழப்பு

திருவண்ணாமலை

ஆரணி அருகே பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் தீக்காயம் அடைந்த 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவடடம் ஆரணி அடுத்த சதுப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. நெசவு தொழிலாளியான இவருக்கு 7 வயதில் சபரிவாசன் என்ற மகன் உள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்றிரவு சுப்பிரமணி வீட்டின் அருகே அப்பகுதி சிறுவர்கள் வெடி வெடித்துள்ளனர்.

பட்டாசு வெடித்தபோது விபத்து – 7 வயது சிறுவன் உயிரிழப்பு

அதனை சபரிவாசன் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் சபரிவாசனுக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக சிறுவனை மீட்டு ஆரணி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சபரிவாசன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே பட்டாசு வெடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.